தற்போதைய செய்திகள்

தில்லி காசியாபாத்-ஹூப்ளி முதல் விமான சேவை தொடங்கியது!

DIN



சிறுநகரங்களை வான்வழியாக இணைக்கும் உடான் திட்டத்தின் கீழ், தில்லியை அடுத்த காசியாபாத்தின் ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து, கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு முதல் நேரடியான பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சிறுநகரங்களை வான்வழியாக இணைக்கும் உடான் திட்டத்தின் கீழ், தில்லியை அடுத்த காசியாபாத்தின் ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து, கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு முதல் நேரடி பயணிகள் விமான சேவையை ஸ்டார் ஏர் என்ற தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது. 

50 பேர் பயணம் செய்ய கூடிய இந்த ஜெட் விமானம் ஹூப்ளியில் இருந்து புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமை என வாரத்தில் மூன்று முறை இயக்கப்படும். இதில் பயண கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.3,699 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தில்லி விமான நிலையத்தில் விமானங்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் அதன் சுமையைக் குறைக்கும் வகையில் காசியாபாத்தில் இருந்து இந்த சிறிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.   

பயணிகள் விமானத்தின் சேவையை ஸ்டார் ஏர் நிறுவனம் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்தி வருகிறது. இதில் உடான் திட்டத்தின் கீழ் மிக அதிக தூரத்திற்கு இயக்கப்படும் விமானமும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT