தற்போதைய செய்திகள்

சவுதி அரேபியாவில் கோர விபத்து: புனித யாத்திரை சென்ற 35 பேர் பலி

DIN



ரியாத்: சவுதி அரேபியா மதினா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்தனர்

சவுதி அரேபியா மதினா அருகே ஹஸ்ரா சாலையில், 39 பேருடன் புனித யாத்திரை சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, அந்நாட்டு நேரப்படி இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதி கோர விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில், புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் அல் ஹம்மா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்திக்காடு கிராம விவசாயிகளுக்கு பயறு வகை சாகுபடி பயிற்சி

கேழ்வரகு கொள்முதல் கால அவகாசம் நீட்டிப்பு

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

‘மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரம் அவசியம்’

முதியவா் சாவில் மா்மம்: காவல் நிலையத்தில் மருமகள் புகாா்

SCROLL FOR NEXT