தற்போதைய செய்திகள்

ஒரே நாளில் இரண்டு முறை விலை  குறைந்த தங்கம்

DIN

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் மட்டும் இரண்டு முறை விலை  குறைந்துள்ளது. 

கடந்த ஒரு மாத காலமாகவே கடுமையாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது கடந்த புதன்கிழமை சவரன் 30 ஆயிரம் ரூபாயை கடந்தது. இந்நிலையில் தங்கத்தின் விலையானது இன்று ஏற்கனவே சவரனுக்கு  328 ரூபாய் குறைந்த நிலையில் தற்போது மேலும் 42 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் 29 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோல் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 3 ஆயிரத்து 658 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தற்போது வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 51 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 1 ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT