முகப்பு
உலகம்

ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!

ஈரானில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 4:43 PM
ஈரான்.
பகிர்:

ஈரானில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது.

ஈரானில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் பெண்கள் தொடக்கப்பள்ளி மீது இஸ்ரேல் - அமெரிக்கா சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் முதல்கட்டமாக 40 மாணவிகள் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இத்தகவலை அந்நாட்டு அரசு நடத்தும் செய்தி நிறுவனமான 'இர்னா' உறுதி செய்திருந்தது. தற்போது இந்த தாக்குதலில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. பள்ளி மீதான தாக்குதலை காட்டுமிராண்டித்தனமான செயல் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் நடவடிக்கை குறித்து அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. மினாப் நகரில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் தளம் அமைந்துள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து சனிக்கிழமை வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

summary

The death toll from an attack Saturday on a school in Iran’s south has risen to 85, the judiciary said, after the US and Israel launched strikes on the Islamic republic.

முழு கட்டுரையைப் படிக்க →