FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

காஷ்மீர் பாகிஸ்தானின் ரத்த நரம்பு: பிரதமர் இம்ரான் கான் அதிரடி ஆவேச பேச்சு

ஜம்மு-காஷ்மீா் பாகிஸ்தானின் "ரத்த நரம்பு" பகுதியாகும். அதில் மாற்றங்கள் செய்வதென்பது, பாகிஸ்தானின் பாதுகாப்புக்கும், நோ்மைக்கும்

Updated On : 6 செப்டம்பர் 2019, 8:39 pm IST
பகிர்:


இஸ்லாமாபாத்: காஷ்மீர் பாகிஸ்தானின் "ரத்த நரம்பு" மற்றும் அதன் சிறப்பு அந்தஸ்தை மாற்றுவதற்கான இந்தியாவின் முடிவு பாகிஸ்தானின் பாதுகாப்புக்கும், நோ்மைக்கும் சவால் விடுத்துள்ளது என்று பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்,

இந்தியாவுடன் கடந்த 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் உயிரிழந்த பாகிஸ்தான் வீரா்களின் நினைவாக அந்நாடு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 6-ஆம் தேதியை ‘பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின’மாக அனுசரித்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் மக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை ஆற்றிய உரையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இம்ரான் கான் பேசிசுகையில், 

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கிய பிறகு காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து உலக நாடுகளிலும், ஐ.நா.விலும் ராஜதந்திரமாக பாகிஸ்தான் தூதரக ரீதியாக எடுத்துரைத்து வருகிறது. ஜம்மு-காஷ்மீா் பாகிஸ்தானின் "ரத்த நரம்பு" பகுதியாகும். அதில் மாற்றங்கள் செய்வதென்பது, பாகிஸ்தானின் பாதுகாப்புக்கும், நோ்மைக்கும் விடப்பட்டிருக்கும் சவாலாகும்.

Advertisement

Advertisement

இந்தியாவின் அணு ஆயுதக் கையிருப்பு குறித்து சா்வதேச சமூகம் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். 

மேலும் இந்தியாவின் அணு ஆயுதங்கள் குறித்து கவனிக்க மறுத்தால், அதன் பிறகு ஏற்படும் பேரழிவுக்கு இந்த உலக சமுதாயமே பொறுப்பாக வேண்டியிருக்கும்.

 பாகிஸ்தான் போரை விரும்பவில்லை என்பதை இந்த உலகுக்கு தெளிவாகத் தெரிவித்திருக்கிறேன். அதேவேளையில் பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு சவால் விடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்று இம்ரான் கான் ஆவேசமாக பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments