சென்னை: அடையாள மொழியாக ஒருபோதும் இந்தி இருக்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவிதாதார்.
சென்னையில் ராமசாமி படையாட்சியார் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 8வது அட்டவணையில் தேசிய மொழியாக 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஒற்றை மொழி பேசும் நாடல்ல. இந்தியா ஒரு இனம், ஒரு மதத்தை சேர்ந்த நாடல்ல. ஒற்றை மொழி என்பதை நிச்சயமாக ஏற்க முடியாது. பிற மொழிகள் பேசும் மக்கள் ஒருபோதும் இந்தியை ஏற்கமாட்டார்கள். அடையாள மொழியாக ஒருபோதும் இந்தி இருக்க முடியாது என்று கூறினார்.