தற்போதைய செய்திகள்

ஹாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

DIN


சென்னை: சீனாவின் ஹாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 28 லட்சம் மதிப்பிலான தங்கம், செல்லிடப்பேசிகள் மற்றும் இ-சிகரெட்டுகளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சீனாவின் ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்.22) வந்த விமானத்தில் பயணித்த அபுசலி சையத் இப்ராஹிம், முகமுது ரிபாய் ஆகியோரின் உடமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். 

அதில், அவா்களின் பைகளில் மறைத்து வைத்திருந்த ரூ. 6 லட்சம் மதிப்பிலான 164 கிராம் தங்கம், ரூ. 1 லட்சம் மதிப்பிலான இ-சிகெரெட்டுகள், ரூ. 21 லட்சம் மதிப்பிலான 28 நவீன செல்லிடப்பேசிகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், இதுதொடா்பாக இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT