முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடிய பெண்ணின் கணவர் தற்கொலை

தூத்துக்குடியில் 100 பவுன் நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடி கைதான பெண்ணின் கணவர் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:23 PM
பகிர்:


தூத்துக்குடி: தூத்துக்குடியில் 100 பவுன் நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடி கைதான பெண்ணின் கணவர் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் அருகேயுள்ள பெரிய செல்வம் நகரை சேர்ந்தவர் வின்சென்ட். துறைமுக ஊழியர். இவரது வீட்டில் இருந்த 100 பவுன் நகைகள் திடீரென மாயமாகின. 

இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில் நகைகளை வின்சென்ட் மனைவி ஜான்சி மறைத்து வைத்து திருட்டு போனதாக நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து ஜான்சியை போலீஸார் கைது செய்தனர். 

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த வின்சென்ட் புதன்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.  

இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →