தற்போதைய செய்திகள்

மரக்காணம் அருகே கழுத்து நெரித்துக் கொலை

DIN

மரக்கோணம் அருகே நண்பர்கள் இருவரிடையே வாக்குவாதம் முற்றியதால் தன் நண்பனை கழுத்தை நெரித்துக் கொன்ற சக நண்பன் தப்பு ஓடினார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சுதாகர் (வயது 40). இவரது நண்பர் மரக்காணம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சத்யநாராயணன் (38). இன்று (சனிக்கிழமை) காலை இவர்கள் இருவரும் கரிப்பாளையம் முந்திரி காடு பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது கோயில் உண்டியல் திருட்டு வழக்கில் தொடர்புடைய சுதாகரை, அவரது நண்பரான சத்தியநாராயணன் தட்டிக்கேட்டு திட்டியுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சத்யநாராயணன், சுதாகரின் கழுத்தில் துண்டைப் போட்டு இருக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

தகவலறிந்த மரக்காணம் காவல் துறையினர் சுதாகர் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT