தற்போதைய செய்திகள்

தெலங்கானா: புதிதாக 2,083 பேருக்கு தொற்று

DIN

தெலங்கானாவில் இன்று புதிதாக 2,083 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 2,083 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 64,786 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு மொத்த பலியின் எண்ணிக்கை 530 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 1,114 பேர் மீண்டுள்ளனர். இதையடுத்து மொத்த மீண்டவர்களின் எண்ணிக்கை 46,502 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஹைதராபாத் பெருநகராட்சியில் 578 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT