முகப்பு
தற்போதைய செய்திகள்

தளர்வு இல்லாத முழு ஊரடங்கால் ஈரோடு மாவட்டம் வெறிச்சோடியது: சோதனை சாவடிகளில் காவலர்கள் தீவிர கண்காணிப்பு 

கரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் ஊடுருவி தற்போது தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:


ஈரோடு: கரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் ஊடுருவி தற்போது தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே இதனைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு  தளர்வுகள் உடன் அமலில் உள்ளது. எனினும் வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை.

இதையடுத்து கடந்த ஜூலை மாதம் வந்த நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இந்த மாதம் வரும் 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோட்டில் இன்று தளர்விவில்லாத ழுழு    ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.  50 ஆயிரம் விசைத்தறிகள், தொழிற்சாலைகள்,10 ஆயிரம் ஜவுளிக்கடைகள், 206 டாஸ்மாக் கடைகள், நேதாஜி காய்கறி மார்க்கெட் , சின்ன மார்க்கெட், உழவர் சந்தைகள், நகைக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. 

ஈரோட்டில் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் பன்னீர்செல்வம் பார்க், ஈரோடு பஸ் நிலையம் வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் காந்தி ரோடு ஸ்வஸ்திக் கார்னர் காளைமாடு சிலை சென்னிமலை ரோடு போன்ற பகுதிகளில் மக்கள் வாகனங்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் அத்தியாவசிய பொருள்களான பால், மருந்தகம் வழக்கம்போல் செயல்பட்டது. மேலும் அம்மா உணவகமும் வழக்கம் போல் செயல்பட்டன. முழு ஊரடங்கை மீறுபவர்களை கண்காணிக்க மாவட்ட காவல் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பெயரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக சோதனை சாவடிகளில் காவலர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோட்டிற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் முக்கியமான இடங்கள் அனைத்தும் தடுப்பு வேலிகள் அமைத்து காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர் ஊரடங்கை மீறி ஒரு சிலர் வெளியே சுற்றுவதை காணமுடிந்தது. சிலரது இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை காவலர்கள்பறிமுதல் செய்தனர். மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து டிவியை பார்த்து தங்கள் பொழுதை கழித்தனர். இதைப்போல் கோபி பவானி பெருந்துறை அந்தியூர் சத்தியமங்கலம் மொடக்குறிச்சி பவானிசாகர் உள்பட மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →