ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,384 பேருக்கு கரோனா
ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,384 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,384 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனிடையே ஒடிசா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,384 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,297 ஆக உள்ளது. கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 21,954 ஆகவும், 14,095 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.