முகப்பு
தற்போதைய செய்திகள்

அழகு நிலையம் சென்றதை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

பவானியை அடுத்த சித்தோட்டில் அழகு நிலையத்துக்கு சென்று வந்த மகளைப் பெற்றோர் கண்டித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
கோப்புப்படம்
பகிர்:

பவானி, ஆக. 5: பவானியை அடுத்த சித்தோட்டில் அழகு நிலையத்துக்கு சென்று வந்த மகளைப் பெற்றோர் கண்டித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்தோடு வாணியர் வீதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகள் அபிநயா (வயது 14). சித்தோடு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு  படிக்க உள்ளார். இவர், செவ்வாய்க்கிழமை அப்பகுதியிலுள்ள அழகு நிலையத்துக்கு சென்று வந்துள்ளார்.

கரோனா பரவல் அதிகரித்துக் காணப்படும் நேரத்தில் அழகு நிலையத்துக்கு சென்று வந்ததை அபிநயாவின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த அபிநயா வீட்டில் பாட்டி மற்றும் அத்தையிடம் தூங்க செல்வதாக கூறிச் சென்றவர், வீட்டின் அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு உள்ளார். 

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அபிநயாவை மீட்டு சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சித்தோடு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →