முகப்பு
தற்போதைய செய்திகள்

ராமர்கோயில் பூமிபூஜை: தில்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் இருந்து புறப்பட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
பிரதமர் நரேந்திர மோடி
பகிர்:

புதுதில்லி: அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் இருந்து புறப்பட்டார்.

தில்லியில் இருந்து இன்று காலை 9.30 மணியளவில் புறப்பட்ட பிரதமர் மோடி தனி விமானம் மூலம் லக்னெள வந்தடைய உள்ளார். பின்னர் அங்கு இருந்து அயோத்திக்கு வருகை புரிய உள்ளார். அயோத்தியில் முதலில் அனுமன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த உள்ளார்.  பூமி பூஜையின் ஒரு நிகழ்வாக பகல் 12 மணிக்கு ராம் லல்லா வழிபாடு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் பூமி பூஜை நடைபெறும் இடைத்தை பிரதமர் மோடி சென்றடைகிறார். அங்கு ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமிபூஜையை தொடக்கி வைக்க உள்ளார். பூமி பூஜையின் நினைவாக ஸ்ரீ ராமஜென்மபூமி மந்திர் என்ற தபால் தலையையும் பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.

பூமிபூஜை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக 175 சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மஹத் நிருத்திய கோபால்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →