இலங்கைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு 
தற்போதைய செய்திகள்

இலங்கைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு

இலங்கையில் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

PTI

இலங்கையில் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்றே வெளியிடவுள்ளனர். அதற்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இது குறித்து தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா கூறுகையில்,

இலங்கையில் நேற்று நடைபெற்ற தேர்தலில் 71 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.  நாடு முழுவதும் உள்ள 64 வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மொத்தம் 3,328 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை பணிக்கு வரும் அனைத்து பணியாளர்களும் சுகாதரத் துறை அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக 8,000 சுகாதார பணியாளர்கள் சுகாதார பணியை மேற்கொள்கின்றனர் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT