தற்போதைய செய்திகள்

கேரள நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி

DIN

கேரளத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.


கேரளத்தில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இடுக்கி, கோழிக்கூடு ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

தொடர் மழையால் இடுக்கி ராஜமாலா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் முகாமில் தங்கியிருந்த 80-க்கும் அதிகமான தொழிலாளர்கள் சிக்கினர். இதில் 10 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டு நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT