முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரளத்தில் ரூ. 53.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து நேற்று கேரளம் வந்த இரண்டு பயணிகளிடமிருந்து ரூ. 53.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
கோப்புப்படம்
பகிர்:

துபாயில் இருந்து நேற்று கேரளம் வந்த இரண்டு பயணிகளிடமிருந்து ரூ. 53.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கண்ணூர் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்த இரண்டு பயணிகளிடமிருந்து மொத்தம் ரூ. 53,68,320 மதிப்புள்ள 932 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து சுங்கத்துறை ஆணைய அதிகாரி கூறுகையில்,

துபாயில் இருந்து வந்த இரண்டு பயணிகள் தங்கத்தின் மேல் பாதரசம் பூசப்பட்டு சிறிய பைகளில் மறைத்து வைத்து கொண்டு வந்தனர். இவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகிறோம் என கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →