முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜஸ்தானில் இன்று புதிதாக 422 பேருக்கு கரோனா

ராஜஸ்தானில் இன்று புதிதாக 422 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
ராஜஸ்தானில் இன்று புதிதாக 422 பேருக்கு கரோனா
பகிர்:

ராஜஸ்தானில் இன்று புதிதாக 422 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

இன்று புதிதாக 422 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 49,418 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் ஆவர்.

மேலும், இன்று ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு மொத்த பலியின் எண்ணிக்கை 763 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 13,469 ஆக உள்ளனர் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.