முகப்பு
தற்போதைய செய்திகள்

தெலங்கானாவில் இன்று 2,256 பேருக்கு கரோனா

தெலங்கானாவில் இன்று புதிதாக 2,256 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
கோப்புப்படம்
பகிர்:

தெலங்கானாவில் இன்று புதிதாக 2,256 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 2,256 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 77,513 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், இன்று ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு மொத்த பலியின் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 1,091 பேர் குணமடைந்தனர் இதையடுத்து தொற்றில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 54,330 ஆக உள்ளது.

தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 22,568 ஆக உள்ளது என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.