குஜராத்தில் சிறுத்தை கடித்ததில் சிறுமி பலி
குஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் சங்கசர் கிராமத்திற்கு அருகே 7 வயது சிறுமியை, சிறுத்தை கொலை செய்துள்ளதாக வனத்துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
குஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் சங்கசர் கிராமத்திற்கு அருகே 7 வயது சிறுமியை, சிறுத்தை கொலை செய்துள்ளதாக வனத்துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், சங்கசர் கிராமப் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று பேரை சிறுத்தை கொன்றுள்ளது. கடந்த திங்கள்கிழமை 7 வயது சிறுமியை, சிறுத்தை காட்டிற்குள் இழுத்துச் சென்றது.
இன்று காலை காட்டின் அடர்ந்த பகுதியில் சிறுத்தை கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் உடல் கிடந்தது என கூறினார்.
மேலும் இந்த பகுதியில் ஆகஸ்ட் 8-ம் தேதி ஒரு குழந்தையையும், ஜூலை 26-ம் தேதி ஆடு மேய்ப்பவரையும் சிறுத்தை கொன்றுள்ளது. இந்த காட்டிற்குள் 20 க்கும் மேற்ப்பட்ட சிறுத்தைகள் இருப்பதாகவும், கடந்த இரண்டு மாதத்தில் இது மாதிரியான சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.