முகப்பு
தற்போதைய செய்திகள்

கொல்கத்தா : போலி அழைப்பு மையம் நடத்திய 9 பேர் கைது

கொல்கத்தாவில் போலி அழைப்பு மையம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 12 ஆகஸ்ட், 2020 at 1:29 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:36 PM

கொல்கத்தாவில் போலி அழைப்பு மையம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தெற்கு கொல்கத்தாவின் பிரகதி மைதானம் மற்றும் பிரதாபதித்யா சாலையில் உள்ள அழைபேசி மையங்களில் செவ்வாய்க்கிழமை இரவு காவல்துறை நடத்திய சோதனையில் மக்களை ஏமாற்றி பணமோசடி செய்யும் போலியான மையம் என தெரியவந்தது.

இதையடுத்து இரண்டு இடங்களிலும் 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சோதனையில் மெர்சிடிஸ் கார், ரூ. 4 லட்சம் பணம், மடிக்கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் பிற மின்னணு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

பிகாரின் பாட்னாவைச் சேர்ந்த ஒருவர் தன்னை போலி அழைப்பு மூலம் ஏமாற்றியதாக காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.