முகப்பு
தற்போதைய செய்திகள்

அருணாசல பிரதேசத்தில் புதிதாக 96 பேருக்கு கரோனா

அருணாசல பிரதேசத்தில் இன்று புதிதாக 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 12 ஆகஸ்ட், 2020 at 11:37 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:36 PM

அருணாசல பிரதேசத்தில் இன்று புதிதாக 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 2,327 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

பாதிக்கப்பட்டவர்களில் 86 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. 10 பேருக்கு மட்டுமே காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தது.

இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,634 ஆக உள்ளது. தற்போது மருத்துவமனையில் 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.