தற்போதைய செய்திகள்

உ.பி. யில் நாய் கடித்ததில் சிறுவன் பலி

DIN

உத்தரபிரதேச மாநிலத்தில் தோட்டத்திற்கு செல்லும் வழியில் நாய் கடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழந்தார்.

உத்திர பிரதேசம் மாநிலம் பிலிபிட் மாவட்டம் அருகேவுள்ள ஒரு கிராமத்தில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவன் அஷிஸ் ரஷா (வயது 10). இவர் கடந்த புதன்கிழமை வீட்டிலிருந்து தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த கிராமத்தில் சுற்றித்திரிந்த நாய்கள் அந்த சிறுவனை கடித்ததில் பலத்த காயமடைந்தான். சிறுவனை மீட்ட கிராம மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.

இதுகுறித்து சிறுவனின் தந்தை ஆசித் கான் கூறுகையில், இந்த நாய்கள் முன்பே 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களை கடித்துள்ளது. கிராம மக்கள் நாய்களுக்கு எலும்புகளை கொடுத்து பழக்கியதே இதற்கு காரணம் என தெரிவித்தார்.

இந்த கிராமத்திற்கு வியழக்கிழமை வந்த வனத்துறை அதிகார்கள், அங்குள்ள நாய்களை பிடித்து ஆள் நடமாட்டம் இல்லாத வேறு பகுதியில் விட்டனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி

இளம்பெண்கள் மீது தொடா்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவது குறித்து விசாரணை

அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் இன்று சம்ஸ்கிருத கருத்தரங்கம்: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

தோ்ச்சி பெறாத பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு: தலைமையாசிரியா்களுக்கு வேலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT