ஸ்ரீவில்லிபுத்தூர் : அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் 5-ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாறுகால் ,சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள், கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பார்வர்ட் பிளாக் நகர தலைவர் சோணமுத்து சிபிஐ நகர செயலாளர் மூர்த்தி, திமுக உறுப்பினர் பரமன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்