முகப்பு
தற்போதைய செய்திகள்

கிராமசபைக் கூட்டம் ரத்து: கொ.ம.தே.க. கண்டனம்

கிராமங்களில் நடக்கும் பணி, நிதி ஒதுக்கீடு போன்றவற்றை மக்கள் அறியும் வகையில் நடக்கும் கிராமசபை கூட்டங்களை ரத்து செய்ததற்கு, கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்
பகிர்:

ஈரோடு: கிராமங்களில் நடக்கும் பணி, நிதி ஒதுக்கீடு போன்றவற்றை மக்கள் அறியும் வகையில் நடக்கும் கிராமசபை கூட்டங்களை ரத்து செய்ததற்கு, கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை, கிராமங்களில் நடக்கும் பணிகள், கிராமசபை கூட்டங்கள் நடக்கும்போதுதான் மக்களுக்கு தெரியவரும். அந்த ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி, எவ்வாறு நிதி செலவிடப்படுகிறது என்பதை சாமானியர்களும் அறிய கிராமசபைக் கூட்டம் வாய்ப்பாக உள்ளது.

தரமற்ற பணிகள் நடப்பதை சுட்டிக்காட்டவும், கேள்வி எழுப்பவும் வாய்ப்பாக அமைந்தது. முறைகேடுகளை மக்கள் அறியும் வாய்ப்பும் கிராமசபைகளில்தான் கிடைக்கும். முக்கியத்துவம் வாய்ந்த கிராமசபை கூட்டங்கள், சமூக இடைவெளியுடன் நடத்த அனுமதித்திருக்க வேண்டும்.

முதல்வர், அமைச்சர்கள் புதிய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவது, முடிந்த பணிகளை திறந்து வைப்பதற்கு கூட்டம் வரவில்லையா? முதல்வர் ஆய்வு கூட்டங்கள் நடத்தும்போதும், மாவட்ட எல்லையில் வரவேற்பு கொடுக்க திரண்டு வருவதால் கரோனா பரவாமல் போகுமா? டாஸ்மாக்கை திறந்து விட்டு, மக்கள் கூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என அரசு தெரிவிக்க வேண்டும்.

பாசனத்துக்கு அணைகளில் நீர் திறக்கும் இடங்களில், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பலரும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் அதிமுக கட்சி கூட்டங்கள் கரோனா தொற்றுக்கு இடையே நடத்தப்படுகிறது.

இதுபோன்று அரசு உள் நோக்கம் கொண்டு செயல்படுவதை நிறுத்த வேண்டும். அரசு கிராமசபை கூட்டத்தை ரத்து செய்திருப்பது கண்டனத்துக்குரியது. உடனடியாக தேதி அறிவித்து கிராமசபை கூட்டங்களை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →