முகப்பு
தற்போதைய செய்திகள்

உத்தரகண்ட்: நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலை 7 மூடல்

சாமோலி மாவட்டத்தில் கெளசர் அருகே இன்று மதியம் நிலச்சரிவு ஏற்பட்டதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை 07 மூடப்பட்டுள்ளது.

Updated On : 16 ஆகஸ்ட், 2020 at 4:42 PM
கோப்புப்படம்
பகிர்:

சாமோலி மாவட்டத்தில் கெளசர் அருகே இன்று மதியம் நிலச்சரிவு ஏற்பட்டதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை 07 மூடப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக நெடுஞ்சாலையின் இரு புறங்களில் இருக்கும் மலைகளில் இருந்து மண், கற்கள் மற்றும் குப்பைகள் சரிந்து விழுவதால் பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

பத்ரிநாத் நெடுஞ்சாலை, கர்ன்பிரயாக், பல்தோடா, மற்றும் லம்ப்கர் ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் மூடப்பட்ட நெடுஞ்சாலையை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

Advertisement

உத்தரகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து, நிலச்சரிவு வழக்கமாக ஏற்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.