ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரனுக்கு கரோனா
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஷிபு சோரன் மற்றும் அவரது மனைவிக்கு சனிக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஷிபு சோரன் மற்றும் அவரது மனைவிக்கு சனிக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து ஜார்கண்டின் முதல்வரும் ஷிபுவின் மகனுமான ஹேமந்த் சோரன் கூறுகையில்,
வெள்ளிக்கிழமை இரவு எனது தந்தை மற்றும் தாயாருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி உள்ளனர் என கூறினார்.