பெங்களூரு காவல்துறை பெயரில் போலி முகநூல் பக்கம் : ஒருவர் கைது
‘பெங்களூரு சிட்டி போலீஸ்’ என்ற பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கிய நபரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
‘பெங்களூரு சிட்டி போலீஸ்’ என்ற பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கிய நபரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பெங்களூரு காவல்துறை குற்றவியல் இணை ஆணையர் சந்தீப் பட்டீல் கூறுகையில், ‘பெங்களூரு சிட்டி போலீஸ்’ என்ற பெயரில் போலியான முகநூல் பக்கத்தை தொடங்கியதற்காக மல்லீஸ்வரம் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய நபரைக் கைது செய்துள்ளோம் என கூறினார்.
பெங்களூரில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி முகநூலில் தவறாக பதிவிட்டதற்காக வன்முறை வெடித்தது. இதில் 3 பேர் பலியாகினர், 60 காவலர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.