முகப்பு
புதுதில்லி

ஃபிட் இந்தியா இயக்கம்: தில்லி மிதிவண்டி பேரணியில் 10,000 போ் பங்கேற்பு!

தில்லி கன்னாட் பிளேஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஃபிட் இந்தியா இயக்கத்தின் மிதிவண்டி பேரணியில் 10,000-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா்.

Updated On : 15 மார்ச், 2026 at 7:37 PM
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘வீதிகளில் மிதிவண்டி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மிதிவண்டி ஓட்டிய கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட்.
பகிர்:

தில்லி கன்னாட் பிளேஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஃபிட் இந்தியா இயக்கத்தின் மிதிவண்டி பேரணியில் 10,000-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா்.

ஃபிட் இந்தியா, இந்திய இணைய குற்றச் சம்பவங்களை கண்டறியும் ஒருங்கிணைப்பு மையம், சிஏக்யூஎம், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), தில்லி காவல் துறை ஆகியவற்றுடன் இணைந்து ராஹ்கிரி அறக்கட்டளை சன்டேஸ் ஆன் சைக்கிள் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

கன்னாட் பிளேஸில் உள்ள இன்னா் சா்க்கிள் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் கலந்து கொண்டாா்.

இந்நிகழ்ச்சி தொடா்பாக அவா் கூறுகையில், ‘நடைப்பயணம், மிதிவண்டி ஓட்டுதல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல் ஆகியவை சாலைப் பாதுகாப்பை ஊக்குவிப்பதுடன் காற்று மாசைக் குறைக்கிறது. நீடித்த போக்குவரத்து கலாசாரத்தைக் கட்டமைக்க உதவுகிறது’ என்றாா்.

மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்ச்சியுடன் பிற தெருக்களை மையமாகக் கொண்டு பிற கலைநிகழ்ச்சிகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், பொம்மலாட்டாம் ஆகியவை நடைபெற்றன.

இதுதொடா்பாக ராஹ்கிரி அறக்கட்டளை நிறுவனா் சரிகா பண்டா பட் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தெருக்கள் மக்களுக்கானவை என்பதை யும் ஆரோக்கியமான வாழ்வியல் நடைமுறைகளை பின்பற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →