தாமரை எங்கும் மலரும்: பிரதமர் மோடி
மதுராபூரில் நடைபெற்ற விஜய் சங்கல்ப் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றியது குறித்து...
‘தாமரை எங்கும் மலரும்’ என பிரதமர் மோடி மதுராபூரில் நடைபெற்ற விஜய் சங்கல்ப் பேரணியில் உரையாற்றியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு இன்று (ஏப்.23) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்.29 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்கம், மதுராபூரில் நடைபெற்ற விஜய் சங்கல்ப் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தப் புனித மண்ணிலிருந்து கங்கை அன்னையை நான் வணங்குகிறேன். மதுராபூர், டைமண்ட் ஹார்பர், ஜாய்நகர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்கு பெருமளவில் திரண்டுள்ளனர்.
Advertisement
Advertisement
உங்கள் வருகையே உங்கள் முடிவை உணர்த்திவிட்டது. மே 4 ஆம் தேதி வெளியாகப்போவது வெறும் தேர்தல் முடிவுகள் மட்டுமல்ல. ஒரு மாற்றம் நிகழும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள்
மேற்கு வங்கம் முழுவதும் ஒரு மாற்றத்துக்கான அலை வீசுகிறது. முதல் கட்டத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக பெண்களும் இளைஞர்களும் வாக்களித்த விதத்தை நாடு முழுவதும் பார்த்து வருகிறது.
இன்னும் 10 நாள்களில் வாக்குகள் எண்ணப்படும்போது, தாமரை எங்கும் மலரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதுவே மாற்றத்துக்கான சரியான நேரம் என்று வங்காள மக்களையும், குறிப்பாக முதல் முறை வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
Prime Minister Modi addressed the Vijay Sankalp Rally held in Madhurapur, stating that "the lotus will bloom everywhere."
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.