கம்பம்: 7 பேரை விடுதலை செய்யகோரி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்பாட்டம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யகோரி கம்பத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கம்பம்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யகோரி கம்பத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கம்பம் நகர நாம் தமிழர் கட்சி சார்பில் போக்குவரத்து சிக்னல் அருகே செங்கொடியின் 9 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யகோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.
Advertisement
இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார்.
கம்பம் தொகுதி செயலாளர் குணசேகரன், நகரச்செயலாளர் தங்கபாண்டி, ஒன்றிய செயலாளர் ராம்குமார் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.