முகப்பு
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர காவல்துறையில் புதிதாக 151 பேருக்கு கரோனா : மேலும் 5 பேர் பலி

மகாராஷ்டிர காவல்துறையில் இன்று புதிதாக 151 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
மகாராஷ்டிர காவல்துறையில் புதிதாக 151 பேருக்கு கரோனா : மேலும் 5 பேர் பலி
பகிர்:

மகாராஷ்டிர காவல்துறையில் இன்று புதிதாக 151 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மகாராஷ்டிர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 151 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 14,792 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த காவலர்கள் 5 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,867 ஆக உள்ளது. மேலும், தற்போது 2,772 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.