தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 6,495 பேருக்கு கரோனா: மேலும் 94 பேர் பலி

DIN

தமிழகத்தில் புதிதாக  6,495 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (ஆக. 30, ஞாயிற்றுக் கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 94 ஒரேநாளில்  பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது..

அதன்படி, தமிழகத்தில் புதிதாக 6,495 பேருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவாக சென்னையில் 1,249 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மொத்த பாதிப்பு 4,22,085 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கரோனா தொற்றால் இன்று 94 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 7,231 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் இன்று ஒரே நாளில் 6,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,62,133பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT