கர்நாடகத்தில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
கர்நாடகத்தில் நாளை(புதன்கிழமை) காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் நாளை(புதன்கிழமை) காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே இன்று பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
அவைகூடியதும் இதற்கான மசோதாவினை கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவுஹான் தாக்கல் செய்தார். இதையடுத்து காங்கிரஸ் பேரவைத் தலைவர் சித்தராமையா மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள பேரவைத் தலைவர் குமாரசாமி ஆகியோர் அவையின் மையப்பகுதிக்கு வந்து நின்று கூச்சலிட்டனர்.
பின் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த நிலையில், பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் நாளை கர்நாடக காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுக் கூட்டத்திற்கு அக்கட்சியின் பேரவைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.