சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.65 கோடி மதிப்பிலான கடத்தல் பொருள்கள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.65 மதிப்பிலான தங்கம், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.65 மதிப்பிலான தங்கம், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் கடந்த சில நாள்களாக கடத்தல் தங்கங்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.41 கோடி மதிப்பிலான தங்கம், ரூ. 5.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம், சிகரெட்டுகள் மற்றும் சில மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 2.65 கோடியாகும்.
இந்த கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை 11 வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.