மகாராஷ்டிரத்தில் மேலும் 3,880 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,880 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,880 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,84,773 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 4,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 65 பேர் பலியாகியுள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 17,74,255 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 48,499 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இன்னும் 60,905 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.