அங்கிகரிக்கப்படாத ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம்: ரிசர்வ் வங்கி
அங்கிகரிக்கப்படாத ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி புதன்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
அங்கிகரிக்கப்படாத ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி புதன்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தனிநபர்கள் அல்லது சிறு வணிகங்கள் விரைவாக கடன்களைப் பெறுவதற்காக அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கடன் தளங்கள் / மொபைல் செயலிகளில் கடன் பெறுகின்றனர். அவ்வாறு கடன் வாங்குவோர்களில் சிலர், அதிக வட்டி தொந்தரவு, மறைக்கப்பட்ட பிற கட்டணங்கள் போன்ற தொந்தரவிற்கு பலியாகின்றனர்.
மேலும், பல அங்கிகரிக்கப்படாத செயலிகளில் பதிவேற்றப்படும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றது.
இதுபோன்ற தவறுகளை தடுக்க, ரிசர்வ் வங்கியிடம் முறையான அனுமதி பெற்று இயங்கும் செயலிகளில் மட்டுமே கடன் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.