‘மேற்கு வங்கத்தை யாராலும் அழிக்க முடியாது’: மம்தா
மேற்கு வங்கத்தை யாராலும் அழிக்க முடியாது என முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை நடந்த நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தை யாராலும் அழிக்க முடியாது என முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை நடந்த நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார்.
மாநில தகவல் மற்றும் கலாச்சாரத் துறை சார்பில் இன்றுமுதல் டிசம்பர் 31ஆம் தேதிவரை நடத்தப்படும் ‘வங்காள சங்க மேளா’ என்ற இசை நிகழ்வில் 5 ஆயிரம் இசைக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்வை தொடங்கி வைத்து முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில்,
நமது மண்ணை மதித்து காப்பாற்ற வேண்டும். மேற்கு வங்கத்தை யாராலும் அழிக்க முடியாது என பேசினார்.
மேலும், மேற்கு வங்கத்தை குஜராத்தாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் எனக் கூறினார்.