படம்: டிவிட்டர் - அஸ்வினி குமார் செளபே 
தற்போதைய செய்திகள்

மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் செளபேவிற்கு கரோனா

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபேவிற்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ANI

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபேவிற்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா நோய்த் தொற்றால் மத்திய உள்துறை அமைச்சர் உள்பட நாட்டில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது திங்கள்கிழமை உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில்,

கரோனா நோய்த்தொற்றின் லேசான அறிகுறி தெரிந்ததையடுத்து, சோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருந்துவர்களின் ஆலோசனைப்படி, நான் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டேன். மேலும், கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT