கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

இந்தியாவிலிருந்து 137 பாகிஸ்தானியர்கள் நாடு திரும்பினர்

கரோனா பொதுமுடக்கத்திற்கு முன்பு இந்தியாவிற்கு வந்த 137 பாகிஸ்தான் நாட்டு மக்கள் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பியுள்ளதாக இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

ANI

கரோனா பொதுமுடக்கத்திற்கு முன்பு இந்தியாவிற்கு வந்த 137 பாகிஸ்தான் நாட்டு மக்கள் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பியுள்ளதாக இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

கரோனா காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்திற்கு முன்பு இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தானில் பயிலும் மாணவர்களும், பாகிஸ்தான் குடிமக்களும் நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர்.

இந்நிலையில், அத்தாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு செல்வதற்கு 137 பேருக்கு இந்திய அரசுத் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அத்தாரி - வாகா எல்லை வழியாக பாகிஸ்தானிற்கு 137 பேர் சென்றுள்ளதாக பாதுகாப்புப் படை அதிகாரி அருன்பால் சிங் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முக்கிய வீரர்களின்றி டி20 தொடருக்காக பாகிஸ்தான் சென்றடைந்த ஆஸ்திரேலிய அணி!

அஜீத் பவார் மரணம்! சர்ச்சையாக்கும் மமதா பானர்ஜீ! | Maharashtra | Plane Crash

அபார வெற்றியுடன் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை தொடங்கிய தென்னாப்பிரிக்கா!

ஆஸி. மகளிரணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை முர்முவின் உரை பிரதிபலிக்கிறது: பிரதமர்!

SCROLL FOR NEXT