தற்போதைய செய்திகள்

பாஜகவில் சந்தன வீரப்பன் மகள்

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் முன்னிலையில் சந்தன கட்டைகள் கடத்தல் மன்னன் வீரப்பனின் மகள் வித்தியா சனிக்கிழமை தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். 

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 2000 பேர் பாஜகவில் இணையும் விழா கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் சந்தன கட்டைகள் கடத்தல் மன்னன் வீரப்பனின் இரண்டாவது மகள் வித்தியா, தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் பேசியதாவது:  பாஜக இருக்கும் வரை தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதல்வராக முடியாது. ஸ்டாலின் அதிகம் பொய் பேசுகிறார். நமது தேசத்திற்கு எதிராகவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் காரனுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார். ஸ்டாலின் அதிர்ஷ்டம் இல்லாதவர். தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என முரளிதர ராவ் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

கர்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தைத் தூக்கியெறிந்துவிடும்

SCROLL FOR NEXT