கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை சூசைராஜ் தலைமையில் கிறிஸ்துவர்கள் தவக்காலத்தை இன்று தொடங்கினர்.
இதை ஒட்டி ஆலயத்தில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தவக்கால தொடக்கத்தை ஒட்டி ஒவ்வொருவரின் நெற்றியில் சாம்பல் குறியை பங்கு தந்தை இட்டார். தவகாலத்தை மேற்கொள்ளும் கிறிஸ்துவர்கள் அசைவ உணவுகளை கைவிடுவர்.