தற்போதைய செய்திகள்

வேலூர் கோட்டையில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை:  மூன்று பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

DIN


வேலூர்: வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை பகுதியில் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வந்த  24 வயது பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தி செல்லப்பட்டு வேலூர் கோட்டை பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை அந்த இளம்பெண் ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

தப்பியோடிய மூவரில் ஒருவனை வேலுார் வடக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT