முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை அருகே கார் - லாரி மோதல்: கட்டடத் தொழிலாளி பலி; 11 பேர் படுகாயம்

திருமங்கலம் அருகே கட்டடத் தொழிலாளர்களை ஏற்றி வந்த டாடா சுமோ மற்றும் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
மதுரை அருகே கார் - லாரி மோதிக்கொண்டதில் சிதைந்த டாடா சுமோ
பகிர்:


திருமங்கலம் அருகே கட்டடத் தொழிலாளர்களை ஏற்றி வந்த டாடா சுமோ மற்றும் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

திருமங்கலத்தை அடுத்த கல்லணை பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் 12 பேர் டாடா சுமோ காரில் கல்லணையிலிருந்து திருமங்கலம் நோக்கி வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தனர். அப்போது கல்லணை விலக்கு அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே கட்டடத் தொழிலாளி ராஜு(50) உயிரிழந்தார். மேலும் டாட்டா சுமோவில் சென்ற கல்லணை பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளிகள் தெய்வானை, மகேஸ்வரி, அழகு, பாகத்தால், முத்துப்பிள்ளை, முத்துமாரி, மாயாண்டி, கருப்பையா உள்ளிட்ட 11 பேர் படுகாயமடைந்தனர். 

காயமடைந்த அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

விபத்து குறித்து திருமங்கலம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →