தற்போதைய செய்திகள்

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு 625 கன அடியாக சரிவு

DIN


மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 625 கன அடியாக சரிந்துள்ளது.

காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த லேசான மழை காரணமாக சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1076 கன அடியாக அதிகரித்தது. சனிக்கிழமை இரவு மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 625 கன அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் சனிக்கிழமை காலை 87.11அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 85.95 அடியாக சரிந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.16அடி சரிந்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 48.14 டிஎம்சி ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT