தஞ்சாவூரில் ஆற்றில் மூழ்கிய பெண்ணைத் தேடும் பணி
தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் (புது ஆறு) சனிக்கிழமை காலை மூழ்கிய பெண்ணை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் (புது ஆறு) சனிக்கிழமை காலை மூழ்கிய பெண்ணை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மேல அலங்கத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி நீலாவதி (வயது 46). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், வீரமணி 15 நாள்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு காரணமாக இறந்தார். இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த நீலாவதி சனிக்கிழமை காலை பெரியகோயில் அருகேயுள்ள கல்லணைக் கால்வாயில் குதித்தார்.
இவர் தண்ணீரில் அடித்து செல்லப்படுவதைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று அவரைத் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.