முகப்பு
தற்போதைய செய்திகள்

சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர்களுக்கு கரோனா

சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கில் கைதான தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஆகியோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர்களுக்கு கரோனா
பகிர்:

சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கில் கைதான தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஆகியோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கில் ஒரே காவல் நிலையத்தை சார்ந்த ஐந்து காவலர்களை கைது செய்தனர். இவர்களை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரித்தனர். பின்பு பதினைந்து நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் அந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கடந்த வாரத்தில் கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் சிறையில் உள்ள தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஆகியோருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →