தூத்துக்குடி: மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்களுடன் நேற்று புறப்பட்ட இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ஜலஸ்வா என்ற கப்பல் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை வந்தடைந்தது.
அதில் தமிழகத்தைச் சேர்ந்த 508 பேரும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 700 பேர் பயணித்தனர். அவர்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்று பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து அவர்களது ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கப்பலில் பயணம் செய்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.