தூத்துக்குடியில் காவலர் குத்திக்கொலை
தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் புங்கலிங்கம் ( 34) இவர் தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா அருகே கடந்த 7 ஆம் தேதி
தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பூவலிங்கம் ( 34) இவர் தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா அருகே கடந்த 7 ஆம் தேதி இரவு நின்று கொண்டிருந்த போது பூங்கா காவலாளிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து கத்தியால் குத்தப்பட்ட பூவலிங்கம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தார்.
இது தொடர்பாக எம்ஜிஆர் பூங்கா காவலாளி செல்வத்தை தென்பாகம் காவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.