தற்போதைய செய்திகள்

போலி இ- பாஸ் மூலம் வருபவர்கள் மீது வழக்கு: திருப்பத்தூர் ஆட்சியர் எச்சரிக்கை

வெளி மாவட்டங்களில் இருந்து போலி இ- பாஸ் மூலம் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும்

DIN


திருப்பத்தூர்: வெளி மாவட்டங்களில் இருந்து போலி இ- பாஸ் மூலம் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ம.ப. சிவன் அருள் எச்சரித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டவர் கூறியாதாவது:  திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 எல்லைப்பகுதிகளில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  வெளி மாவட்டங்களில் இருந்து போலி இ - பாஸ் மூலம் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

இ- பாஸ் இல்லாமல் வருபவர்கள் மாவட்ட எல்லையிலேயே திருப்பி அனுப்பப்படுவார்கள் என அவர் கூறினார். ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் உடன் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

இதுகூட தெரியாமல் எப்படி ஒரு கட்சித் தலைவராக இருக்க முடியும்? விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதில்

தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!

SCROLL FOR NEXT